*
காமம் எழுதும் விழிகளின்...ஆழத்தில்..
மோகம் பின்னும்.. விரகத்தின்..மௌனத்தில்..
அசைந்து அசைந்து..
நழுவும் பொழுதுகள்..
குழையும் இதழில்..பரவும்..தீயில்..
மூழ்கிய..முத்தமொன்று..
நீந்தும் பெருங்கடல்..
வெட்க குறுநகை..!
ஒற்றைத் தீவாய்.. பெண்ணுடல்..
விரையும் பாய்மரம்..
அலையும் திசையில்..
பேய்மழை..
வீசும் காற்றில்..
மோதிச் சிதறிய..
பார்வை வருடலில்..
நெளியும் மின்னல்.
தத்தம் கரைகளை..நித்தம்..அளந்தே..
கட்டித்தழுவி..
தொலையும்.. அலைகள்..!
*********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக