*
சலுகையோடு நீட்டப்படும்
சலுகையோடு நீட்டப்படும்
கரங்கள்
பெற்றுக் கொள்கின்றன
ஒரு கருணையை
மரணத்தை ஏந்திச் செல்லும்
கால்கள்
அடையத் துடிக்கின்றன
இறுதி தரிசனத்தை
இருப்புக்கும் இன்மைக்குமான
பெருவழியில்
சுவடுகளாகிறது
திரும்புதலின் பாதையும்
காத்திருந்து எரியும் தெருவிளக்கும்
*****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 28 - 2011 )