புதன், ஆகஸ்ட் 24, 2011

நிரம்பித் தளும்பும் கானல்..

*
சுவரில் தொங்கும்
ஓவியப் பறவைகளின் சிறகுகள் நிழல்
பரத்திய நிலத்தில்
நடக்கும் வழிப்போக்கன்

தொலைவில் நெளியும் கானல்
இந்த அறையில்
வரவேற்பாளினி புன்னகையில் வழிந்து
நிரம்பித் தளும்புகிறது
கண்ணாடி டீபாயிலும்

ஆங்கில தினசரியின் தலைப்புச் செய்தியில்
இரண்டாய் உடைந்த ரயில் பெட்டியை
கொத்தித் தூக்குகிறது அப்பறவை
அசையும் மின்விசிறியின் சிறகுகள் கொண்டு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 1 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4606

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக