சனி, ஏப்ரல் 25, 2009

முடிந்த காலம்..- 1

*

வரம் கேட்க
நாக்கு சமதிக்கவில்லை..
தவம் செய்த
இடமோ தொலைந்துவிட்டது..

பயணிக்காத
பாதைகளின் வரைப்படங்களை

காணாத
கனவின் கீழ் முனைகளை

வாழ்வின்
ஏதோ ஒரு இருட்டுச் சுவரில்

எவனோ
ஒருவன் கிறுக்கி வைத்திருக்கிறான்..

விடியாத
இரவின் நீட்சி...

யுகத் தொலைவில்
மையமிட்டிருக்கிறது..

வீசக் காத்திருக்கும்
பெரும் புயல் போல..!

******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக