திங்கள், ஆகஸ்ட் 30, 2010

நீலவேணி - ஒன்பதாம் வகுப்பு 'பி' பிரிவு..

*
நீலவேணி
என் கவனங்களை
எப்போதும் தன்னோடு
எடுத்துப் போகிறவளாகவே இருந்திருக்கிறாள்..

ஒன்பதாம் வகுப்பு 'பி' பிரிவுக்கு பிறகு
என்னிலிருந்து காணாமல் போனாள்..

சென்ற மாதம்
மழை நாளொன்றில்..

ஜி.எச். மருத்துவமனை
கான்ஸர் பிரிவை
நான் கடந்த
ஒரு
மதிய வேளை..

என்னிடம் பேனா கேட்டு
எதையோ குறித்துக் கொண்டு
திருப்பித் தந்த போதும்

என்
அடர் மீசை தாடியின்
அடையாள இழப்பிலும்..

மீண்டும்
என் கவனங்களை
தன்னோடு எடுத்துப் போகிறவளாக இருக்கிறாள்
நீலவேணி..

****

1 கருத்து: