வியாழன், ஜூலை 28, 2011

மரணித்தல் வரம்

*
கை நீளுதலை யாசகம் என்கிறாய்
யாசித்து பெறுவதாக இருப்பதில்லை
எனக்கு தேவையான பார்வை

பேசாதிருத்தல் அமைதி என்கிறாய்
பேசி அடைவதாக இருந்ததில்லை
நான் பெற்ற மௌனம்

மரணித்தல் வரம் என்பாய்
எதன் பொருட்டு தவம் இருந்தேனோ
அதிலில்லை
யாசகமோ
ஒரு மௌனமோ
குறைந்தபட்சம் ஒரு பார்வையோ

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 3 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக