வெள்ளி, டிசம்பர் 23, 2011

மேலும் கொஞ்சம் சிறகுகள் வளர..

*
ஒரு பேரமைதி சூழ் கொள்ளும்
பூக்களின் உலகில்
மகரந்தம் தோய்ந்த நுண்ணிய கால்களோடு
மேலும் கொஞ்சம் சிறகுகள் வளரக்
காத்திருக்கிறது
மௌன மனம்

கையகலக் கனவிலிருந்து
வனம் விரிகிறது பச்சை நிற வாசம் பிழிந்து
வைகறை வானின் மஞ்சள் குழைந்து

மூங்கில் துளையூடே ஊடும் மென்காற்றில்
இசைக் குறிப்புகள் தொட்டுத் தொட்டு எழுப்புகின்றது
மலரிதழின் மெல்லிய நரம்பை
அதிலூறும் தேனை

சமன் குலையும் முதல் தெறிப்பை
ஏந்திக் கொள்கிறது சின்னஞ்சிறு பனித்துளி

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக