புதன், மார்ச் 28, 2012

உரையாடலின் நீர்க்கோடு..

*
சொற்கள் துழாவும் நீளச் சாலையில்
கரடுத் தட்டுகிறது இந்தப் பார்வை

வலுவான அர்த்தங்கள் பயணிக்கத் தயங்கும்
சுவரில் படர்கிறேன் பாசியென

என் மீது வழிந்திறங்கும் உரையாடலின் நீர்க்கோட்டில்
திரளும் கீழ்முனையில்
இப்போதும் குளிர்கிறாய் உறையப் போகும் எனது
தருணத்தை நோக்கி..

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 5 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5357

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக