*
இருவருக்குமான
இடைப்பட்ட
நிமிடங்களின் இடைவெளியில்..
மௌனமொன்று..
உறுமுகிறது..
பின்னிரவின்
தெருவிளக்கு உமிழும்
மங்கிய
மஞ்சள் நிற ஒளியின்..
நிழலுக்குள்..
கவனிப்பற்று
சேகரமாகிறது..
சலிப்பு மிகு பகமைக்கான
முகாந்திரம்..
முஷ்டியின்
பலம் முறுகும்..
தசை நார்களில்..
எப்போதும்
தொடுக்க முடிந்ததில்லை..
சமாதானத்துக்கான பூக்களை..!
*****
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 31, 2009
புதன், ஜூலை 29, 2009
தொலைந்த இரவும்.. அடுத்தப் பக்கத்துக்கான திசையும்..
*
அகாலத்தில்
கதவு தட்டுகின்றன..
பாதி படித்து
கவிழ்த்து வைத்த
புத்தகத்தின்
கதாபாத்திரங்கள்..
'தூக்கம் தொலைத்த
இரவும்..
தொலைந்து விட்டதாக..'
சண்டைக்கு வருகின்றன..
அடுத்தப் பக்கத்துக்கான..
திசையை..
நச்சரிப்புடன் விசாரிக்கின்றன..
'என்னங்க..?' - என்றாள்
தூக்கக் கலக்கத்தில்..மனைவி..
'படு..! காலைல எழுப்பறேன்..' -
என்றபடி..
படுக்கையறை கடந்து..
படிக்கும் மேஜையில்..
கவிழ்ந்து கிடந்த புத்தகத்தை..
கையிலெடுத்து..
விட்ட இடத்திலிருந்து...
வாசிக்கத் தொடங்கினேன்..
தொலைந்த இரவும்..
அடுத்தப் பக்கத்துக்கான
திசையும்..
அறை ஜன்னலின்
இடுக்கினூடே..
மெல்ல நுழைகிறது..
*****
அகாலத்தில்
கதவு தட்டுகின்றன..
பாதி படித்து
கவிழ்த்து வைத்த
புத்தகத்தின்
கதாபாத்திரங்கள்..
'தூக்கம் தொலைத்த
இரவும்..
தொலைந்து விட்டதாக..'
சண்டைக்கு வருகின்றன..
அடுத்தப் பக்கத்துக்கான..
திசையை..
நச்சரிப்புடன் விசாரிக்கின்றன..
'என்னங்க..?' - என்றாள்
தூக்கக் கலக்கத்தில்..மனைவி..
'படு..! காலைல எழுப்பறேன்..' -
என்றபடி..
படுக்கையறை கடந்து..
படிக்கும் மேஜையில்..
கவிழ்ந்து கிடந்த புத்தகத்தை..
கையிலெடுத்து..
விட்ட இடத்திலிருந்து...
வாசிக்கத் தொடங்கினேன்..
தொலைந்த இரவும்..
அடுத்தப் பக்கத்துக்கான
திசையும்..
அறை ஜன்னலின்
இடுக்கினூடே..
மெல்ல நுழைகிறது..
*****
பூக்கும் நுண்ணியங்கள்..!
*
இள ரோஸ் நிற
'ஜெல்லாக'
தளும்பும் உதடுகளின்..
ரேகை வகிடுகளுள்..
பூக்கும் நுண்ணிய
ஈரத் துளிகளில்..
பிரமிக்கும்..
குட்டி பிம்பங்களாய்..
மிதக்கக் கூடும்..
என் முத்தங்கள்..
****
இள ரோஸ் நிற
'ஜெல்லாக'
தளும்பும் உதடுகளின்..
ரேகை வகிடுகளுள்..
பூக்கும் நுண்ணிய
ஈரத் துளிகளில்..
பிரமிக்கும்..
குட்டி பிம்பங்களாய்..
மிதக்கக் கூடும்..
என் முத்தங்கள்..
****
வெட்கத்தின் வளைவுகளை..முத்தமிடும் பென்சில் முனை..
*
வரைக்கோட்டுச் சித்திரத்தின்..
நெளி கோடுகளில்..
வெட்கத்தின் வளைவுகளை..
விரல் நுனிகள்
பிரசவிக்க..பிரசவிக்க..
பென்சிலின்
கார்பன் முனை..
முத்தமிட்டபடியே..
பயணிக்கிறது...
கையெழுத்திட்டு..
புள்ளி வைக்கும் வரை..
****
வரைக்கோட்டுச் சித்திரத்தின்..
நெளி கோடுகளில்..
வெட்கத்தின் வளைவுகளை..
விரல் நுனிகள்
பிரசவிக்க..பிரசவிக்க..
பென்சிலின்
கார்பன் முனை..
முத்தமிட்டபடியே..
பயணிக்கிறது...
கையெழுத்திட்டு..
புள்ளி வைக்கும் வரை..
****
மல்லுக்கடுதலுக்கான இரவுகள்..
*
என்
அறை முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
புத்தகங்கள்..
புத்தகங்கள் முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
வாக்கியங்கள்..
வாக்கியங்கள் முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
சொற்கள்..
சொற்களுக்குள்..
முண்டியடித்து -
ஒளிந்து கொள்கின்றன
எழுத்துக்கள்..
அர்த்தங்களோடு
மல்லுக்கட்டும்...
இரவை.. உருக்க..
'ஸ்டீல்' பாத்திரத்தில்..
நிரப்பி அடுப்பிலேற்றுகிறேன்..
பாத்திரத்தின்..
அடிவயிற்றை..
ஆசையோடு நக்குகிறது..
'கேஸ்' நெருப்பு...
****
என்
அறை முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
புத்தகங்கள்..
புத்தகங்கள் முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
வாக்கியங்கள்..
வாக்கியங்கள் முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
சொற்கள்..
சொற்களுக்குள்..
முண்டியடித்து -
ஒளிந்து கொள்கின்றன
எழுத்துக்கள்..
அர்த்தங்களோடு
மல்லுக்கட்டும்...
இரவை.. உருக்க..
'ஸ்டீல்' பாத்திரத்தில்..
நிரப்பி அடுப்பிலேற்றுகிறேன்..
பாத்திரத்தின்..
அடிவயிற்றை..
ஆசையோடு நக்குகிறது..
'கேஸ்' நெருப்பு...
****
புணரும் வேர் நுனிகள்..
*
நறுவிசாய்
மௌனம் பூசிக்கொள்ளும்
தனிமையின்
வேர் நுனியில்..
முடிச்சிட்டுக் கிடக்கிறது
சிறு சப்தம்..
உறைந்துவிட்ட
நினைவுகளை உருக்கிட..
அனல் வீசிக் கடக்கும்
ஒருத்தியின் புன்னகையால்..
பொங்கும்
கண்ணீர்த் துளிகளை..
புணரும்
வேர் நுனிகள்..
இளக்குகின்றன..
முடிச்சுகளை..
*****
நறுவிசாய்
மௌனம் பூசிக்கொள்ளும்
தனிமையின்
வேர் நுனியில்..
முடிச்சிட்டுக் கிடக்கிறது
சிறு சப்தம்..
உறைந்துவிட்ட
நினைவுகளை உருக்கிட..
அனல் வீசிக் கடக்கும்
ஒருத்தியின் புன்னகையால்..
பொங்கும்
கண்ணீர்த் துளிகளை..
புணரும்
வேர் நுனிகள்..
இளக்குகின்றன..
முடிச்சுகளை..
*****
நுரைக் குமிழென..
*
முகில் சுழியில்..
சிக்கி முறுகும்..
மழைத் துளியில்..
மின்னல்
பட்டுத் தெறிக்கும்
சிரிப்பலையின்..
நுரைக் குமிழென..
ஊதிப் பெருகும்..
நின் காதல்..!
****
முகில் சுழியில்..
சிக்கி முறுகும்..
மழைத் துளியில்..
மின்னல்
பட்டுத் தெறிக்கும்
சிரிப்பலையின்..
நுரைக் குமிழென..
ஊதிப் பெருகும்..
நின் காதல்..!
****
மழைச் சித்திரங்கள்..
*
செருப்பின்
ஓரத் தையல்களில்..
நைந்து..
பிசிராய் கிளம்பிய
நூல் நுனிகள்..
நேற்றிரவு..
வீடு திரும்புகையில்..
மழையில்..
தெருவில்..
நனைந்த சுகத்தில்..
வாசலோரச் சுவரில்..
வரைந்து வைத்திருக்கின்றன..
தான்..
ப்ரியப்பட்ட
கோட்டுச் சித்திரங்களை..!
*****
செருப்பின்
ஓரத் தையல்களில்..
நைந்து..
பிசிராய் கிளம்பிய
நூல் நுனிகள்..
நேற்றிரவு..
வீடு திரும்புகையில்..
மழையில்..
தெருவில்..
நனைந்த சுகத்தில்..
வாசலோரச் சுவரில்..
வரைந்து வைத்திருக்கின்றன..
தான்..
ப்ரியப்பட்ட
கோட்டுச் சித்திரங்களை..!
*****
மெட்ரோ கவிதைகள் - 23
*
வட்டமாய்
நகம் கொண்டு
கீறி வைத்திருக்கிறேன்..
ஏதோ ஒரு
'ஷேர்' - ஆட்டோவின்
இடப்பக்கத் தகட்டில்..
உன்னோடு
செல் போனில்..
பேசிய..
நேற்றைய பயணத்தை..
****
வட்டமாய்
நகம் கொண்டு
கீறி வைத்திருக்கிறேன்..
ஏதோ ஒரு
'ஷேர்' - ஆட்டோவின்
இடப்பக்கத் தகட்டில்..
உன்னோடு
செல் போனில்..
பேசிய..
நேற்றைய பயணத்தை..
****
செந்நிற சதுரங்களும்..எல்லையற்ற வடிவங்களும்..
*
ஒற்றை
மழைத் துளி..
தூரிகையாக
உருகிய..
கன வேகத்தில்..
செந்நிற சதுரக் கல்லில்
மோதிய நொடியில்..
'மாடர்ன் ஆர்ட்டாக..'
ஊறுகிறது..
எல்லையற்ற வடிவோடு..
****
ஒற்றை
மழைத் துளி..
தூரிகையாக
உருகிய..
கன வேகத்தில்..
செந்நிற சதுரக் கல்லில்
மோதிய நொடியில்..
'மாடர்ன் ஆர்ட்டாக..'
ஊறுகிறது..
எல்லையற்ற வடிவோடு..
****
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)