*
இரவெல்லாம்..
தனிமையில்..
அழுது களைத்த..
உன்
முகத்தில்..
படர நேர்ந்த
பசலையோடு விடிந்தபின்..
என்னைப் பார்த்த கணத்தில்
பூத்த..
உதட்டுக் காம்புக்கும்..
என்
பயணத்துக்குமான..
இடைவெளியில்...
முளைத்த முட்களெல்லாம்..
புதர்காடாய்..
உன்
உடலெங்கும் அடர்ந்திருக்கும்..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக