திங்கள், ஜூன் 22, 2009

'இடை' வெளி முட்கள்..

*

இரவெல்லாம்..
தனிமையில்..
அழுது களைத்த..

உன்
முகத்தில்..

படர நேர்ந்த
பசலையோடு விடிந்தபின்..

என்னைப் பார்த்த கணத்தில்
பூத்த..
உதட்டுக் காம்புக்கும்..

என்
பயணத்துக்குமான..

இடைவெளியில்...
முளைத்த முட்களெல்லாம்..

புதர்காடாய்..
உன்
உடலெங்கும் அடர்ந்திருக்கும்..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக