*
அசுர னெனவும்
அரக்கனாவும்
வரைந்து கொடுத்தீர்..
என்
பாட்டனின் பாட்டன் விந்தை..
புத்தாடைகளும்..
பட்டாசுகளுமாக
வெடிக்கின்றன..
ஆண்டுதோறும்..
அவன் மாமிசம்..
வெட்கமின்றி - பிரக்ஞையற்று..
வாழ்த்துக்களும்
சொல்லித் திரிகிறேன்..
பாட்டன்களின்
சாவு குறித்த துக்கம்
அறியும் திறனற்று..
குழந்தைகளை மட்டுமே..
மன்னிக்கக் கூடும்..
வெடிப்புகையில்..
மூச்சுத் திணறும்..
அவன் ஆன்மா..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக