வியாழன், ஜனவரி 28, 2010

ஏதேதோ உரையாடுகிறாய்..

*

பார்வையால் -
என் 'இருப்பை' உறுதிப்படுத்திக்கொண்ட பின்..

ஏதேதோ உரையாடுகிறாய் சத்தமாய்..
எல்லாரிடமும்..

உன் 'இருப்பை' -
நான்
மௌனமாகவே பதிவு செய்ய நேருகிறது
ஒவ்வொரு முறையும்..

அது-
எந்த இடமாக இருந்தாலும்..
எவரோடு என்றாலும்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக