*
ஒரு
அழுத்தமான முத்தத்துக்குப் பிறகு
வார்த்தைகள்
இல்லாமல் போகிறது
இறுகிய த்வனியில்
வெளியேறும் பெருமூச்சில்
ஒவ்வொரு கணமும்
குளிர்ந்து வியர்த்தபடி நிழலாடுகிறது
உரையாடல்களின் பிரியத்தை
திரவமெனப் பருகுதல்
சாத்தியமென விழுகிறது
இருள் நொறுக்கும்
மௌன மழையொன்று..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக