*
ஐந்து விரல் நுனிகளிலும்
மைப்புள்ளியிட்டு
வரைந்த பொம்மைகள் சிரிக்கின்றன
சாப்பிட அழைத்தும்
கை கழுவ உத்தரவிட்டும்
பிடிவாதமாக மறுக்கிறாள்
பாவம் பொம்மைகள் என்று
' அவைகளுக்கும் நீ உணவு ஊட்டலாம்..
வா... சாப்பிடு ' - என்ற
அம்மாவின் சாமர்த்தியத்தை
விழிகள் கலங்க.. உதடு பிதுங்க
எளிமையாக மறுக்கிறாள்
' வேணாம்மா... அதுங்க செத்துடும்..! '
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஏப்ரல் - 22 - 2010 )
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=6196&Itemid=139
:) ரசனைகளை மெல்லிய நூலிழையில் கோர்த்து மாலையாக்கி இருக்கிறது இக்கவிதை... அவ்வழி சொற்களிலேயே.........
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குகுழந்தை மனசு இதானோ?