*
குரல் தொலைந்துவிட்டதாக
புகார் ஒன்று எழுதி
ஒட்டி வைத்திருக்கிறாள்
அன்பின் கதவு மீது..
மரணத்தின் எண்ணிக்கையை
அறிவிப்பதாகவே இருக்கிறது..
இலக்கத்தின்
வட்டச் சுழற்சிக்குள்..
சிக்கி நிற்கும் எண்கள்..
கிரீச்சிடும்
தாழ்ப்பாளின் எச்சரிக்கையை..
பொருட்படுத்துவதில்லை விரல்கள்..
யாராவது..
எப்பவும் - வருவதும் போவதுமாக
துருப்பிடித்துத் திரும்புவார்கள்..
புலன்கள் அறியா வகையில்..
மேற்கூரையிலிருந்து..
பொடித்து உதிரக்கூடும்..
வாழ்வதாக
நம்பும் காலம்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக