*
ஒரு
தீக்குச்சி
இறந்ததாக..
எப்படிச் சொல்வாய்.?
அது
பிரசவித்தது
நெருப்பையல்லவா..?
தாயின்
வயிறு வெடித்து..
வெளிவருகின்றன..
தேள்குட்டிகள்..
அதன்
கொடுக்கை
என்ன செய்வாய்..?
இன்னும்
அடர்த்தியாய் வளர..
உன் மீசைக்கு..
நீ
தேன் தடவிக் கொள்ளலாம்..
எங்கள்..
ரத்த மகரந்தத்தில்..
வெடிக்கும்
விஷ ஊற்றைப் பருக..
உன்
உதடுகளை
தயார் படுத்தி கொள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக