*
கொடியில் காயும்
ஈரத் துணிகளை..
உருவி போவதை போல்
உதறி பார்க்கிறேன்..
எழுதி முடித்த
கவிதைத் தாளை..
பொய்யான
தூறலோடு..
பழிப்பு காட்டி நகரும்
மேகத் துண்டுகள்..
சூரியனை உறிஞ்சும்
ஆவலோடு..
உதடு குவிக்கிறது..
ஆரஞ்சு நிறக்
குழைவில்..
பிசிறடிக்கும் ஓரங்களோடு
கலைக்கும் காற்றை..
ஒத்தடமிடும்..
முயற்சியில்..
வார்த்தைகள்
ஒவ்வொன்றும்..
வானவில்லை
யாசிக்கின்றன...
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக