செவ்வாய், மே 26, 2009

வெயில் கோடுகள்..

*

அறை
ஜன்னல் கண்ணாடியை
பூசி மெழுகும்
வெயில்..

கம்பி சட்டகத்தை
வரைந்து வைக்கிறது
கோடுகளாய்..

வந்தமர்ந்த ஈயின்
அசைவற்ற
நிழலை..

துரத்தி வந்த
சுவர் பல்லி..

தற்செயலாய்..
நக்க நேர்ந்தது..
வெயிலை..

****

1 கருத்து:

  1. பல்லியின் நாவில் படிந்திருக்கக் கூடும் வெயிலின் சூட்டை உணர முடிகிறது..

    பதிலளிநீக்கு