*
உழைப்பாளர் சிலைக்கு
பின்புற படிக்கட்டோரம்
நா வரளும் வெய்யிலில்
முக்காடிட்டு
உட்கார்ந்தபடி
மாங்கா பத்தைகளும்
வெள்ளரிப் பிஞ்சுகளும்
தண்ணீர் பாக்கட்டும்
விற்கிறாள் சிறுமி
அதட்டலோடு கடக்கும்
போலீஸ் மனிதன்
ஓசியில் தாகம் தீர்ந்து
பிளாஸ்டிக் கவரை
வீசிவிட்டு
' நாளைக்கு ஒன்ன இங்க பார்த்தேன்
தொலைச்சிடுவேன்..' -
என்றபடி
நகர்கிறான்
பத்தடி தள்ளி சர்பத் விற்கும்
மனிதனை நோக்கி..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக