*
நீங்குதல் குறித்து
எழுதிக் கொண்டிருக்கும் இரவொன்றின்
அசையும் நிழலை
பேனாவில்
ஊற்றிக் கொண்டிருந்தது
உன் பார்வை
வெறுப்போடு கவிழ்த்த பிறகும்
புகைப்பட சட்டக விளிம்பின் வழியே
கசிந்த உன் பிம்பம்
இம்மேஜை முழுதும் பரவி
கண்ணாடி மீது மெழுகுகிறது
உன்னை
நீங்குதல் குறித்து
பிறகெப்போதும் எழுத முடிவதில்லை
சென்ற கணம் வரை..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக