திங்கள், மார்ச் 31, 2014

கீழிறக்க முடியாத பாய்மரங்களின் திசை

*
ஒரு சிறிய அவநம்பிக்கையின் துடுப்புகளை
ஏன் செலுத்த வேண்டும்
அத்தனை வலுவாக

கரைமோதித் தவிக்கும் மனதின்
நீர்த்திவலைகள் கிழிய
உன் திசையை விரல் நீட்டிக் காட்டுகிறாய்

திரண்டிருக்கும் சதுப்பின் ஆழம் வரை
குழைய சிக்கிக் கிடக்கும்
விஷக் கொடியின் வேர்களாகிச் சுற்றுகிறது
ஈரப் பதத்தில் என் துருவங்கள்

நட்சத்திர வெளிச்சம் பட்டு
காற்றில் துடிக்கும் பாய்மரத்தின் அசைவை
மடித்துக் கீழிறக்க முடிவதில்லை

ஏன் செலுத்த வேண்டும் அத்தனை வலுவாக
ஓர் அவநம்பிக்கையின் சிறிய துடுப்பை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 9 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6347

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக