திங்கள், மார்ச் 31, 2014

தனிமையின் பழஞ்சுவர்

*
அழுத்தமாய் இருந்துப் பழகு என்கிறான்
ஒரு வாக்குறுதிக்குள் படர்ந்து விரவும்
இருள் பற்றி யோசிக்காமல் இருந்ததில்லை

நம்பிக்கையின் வேர்களில் கசியும் ஈரம்
தண்ணீரல்ல ரத்தம் என்பதை
பூக்கத் துடிக்கும் மெளனத்திடம் சொல் என்கிறான்

தனித்துவிடப்பட்ட துயரத்தின் பழஞ்சுவரில்
பெய்து முடித்த மழை நீர் மிச்சம் கூரையிலிருந்து
இழுத்தபடி ஒழுகும் கசடென உணர்வதை
நிறுத்த முடிவதில்லை

ஓய்ந்தடங்கா மனக் கூச்சல்களோடு
வெறிக்க நேரும் வெற்றிடத்தில்
இதுவரை யாரும் புலப்பட்டதில்லை

பெயரற்ற முகங்களின் நினைவடுக்குகள் தோறும்
இடம்பெயரத் தடுக்கும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும்
மீட்சியின் பாதையென விட்டு வைத்திருப்பது

இத்தனிமைப் பழஞ்சுவரை மட்டுமே

*****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 15 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20104-2012-06-15-11-55-41

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக