சனி, மார்ச் 29, 2014

மரம் உதிர்க்கும் காய்ந்த இலைகள்..

*
அத்தனை நிராசையுடன் தான்
உன்னை நான் நெருங்குகிறேன்

உனது சமரசங்களை ஒரு செய்தித்தாளைப் போல
மடித்து வைத்திருந்தாய்
தலைப்புக்கள் நிலம் நோக்கி
தொங்கிக் கொண்டிருந்தன

உன் - என் பார்வைத் தொட்டு நின்ற
இடைவெளியில்
மரம் உதிர்த்த காய்ந்த இலைகள்
மிதந்தன நம் காற்றில்

வா
ஒரு டீ சாப்பிடுவோம் முதலில்
அப்புறம் பேசிக் கொள்வோம் என்கிறேன்

நீயுன் தலைப்புகளை அள்ளி
உன் கைப்பைக்குள் திணித்துக் கொண்டு
அமைதியாகப் பின்தொடர்கிறாய்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 11 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6195

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக