சனி, மார்ச் 29, 2014

பின்வாசல் பூட்டிய கதவுகள்

*
முன்பு
பூச்சாண்டிகளின் உலகுக்குள்
குழந்தைகள் நுழைவதில்லை

அந்த
ரகசிய உலகின் கதவுகள்
திறக்கப்படாமலேயே
அக்குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள்

இன்று
பூச்சாண்டிகள் தத்தம் உலகிலிருந்து
வெளி வருவதேயில்லை

சுட்டி டிவி பார்த்தபடியே இரவு உணவு
அனிமேஷன் வில்லன்களின் குகை
யாவும்
ரிமோட்டின் ஒற்றைப் பொத்தானில்
திறந்துக் கொள்கிறது

முன்னிரவு நேரத் தெருக்கள்
வெறிச்சோடிக் கிடக்கின்றன

வாசல்களற்று சத்தமின்றி கடந்துபோகும்
பின்னிரவுப் பூச்சாண்டிகளை
தெருநாய்கள் மட்டுமே
ஊளையிட்டு வழியனுப்புகின்றன வேறெங்கோ

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ மார்ச் - 11 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6195

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக