திங்கள், மார்ச் 31, 2014

தலைகீழாய்த் தொங்கும் தனித்த இரவு..

*
அப்படியொரு சொல்லுக்குப் பிறகு
தீர்மானமான நிராகரிப்புக்கு பிறகு
விடிய மறுத்த இரவின்
தனிமைக்குப் பிறகு

உன் அழைப்பை ஏற்கும் மனதில்லை

ஆனால்
பதிந்து வைத்திருக்கும்
உனது கெஞ்சல் குரலின்
தொடர் கெஞ்சலில்

தலைகீழாய்த் தொங்குகிறது
தனித்த
இரவின்
அந்தச் சொல்

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 22 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20186-2012-06-23-11-50-05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக