திங்கள், மார்ச் 31, 2014

குலையும் பகலை உணரத் தூண்டும் கானல்..

*
நிறுத்தாமல் அழைக்கிறாய்
நறுவிசு குலையும் பகலை
காலடியில் உணரத் தூண்டுகிறது
உனது கானல்

செவிகளுக்கு அப்பால் கடக்கவிருக்கும் தொலைவை
நிழல் போர்த்தவில்லை

துல்லியமான வெளியைக் கையகப்படுத்தும்
சூட்சுமத்தின் ஈரத்தை
கண்ணாடிக் குடுவையில் ஏந்தி நடக்கிறேன்
நீ
நிறுத்தாமல் அழைக்கிறாய்

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூலை - 27 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20613-2012-07-27-18-31-14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக