வெள்ளி, மார்ச் 28, 2014

பதிமூன்று இலைகள்..

*
நடைபாதைக் கான்க்ரீட் பெயர்வில்
பார்வைக்கு அகப்படாமல் மக்கிய விதையொன்றின்
வயிற்றைப் பிளந்து
உயர்ந்து மெலிந்த சின்னஞ்சிறு செடி
பாதி உடைந்த செங்கற்கள் மூன்றின் அரணோடு
தாங்கிப் பிடித்து நிற்கிறது
பதிமூன்று இலைகளை

காற்றொன்று
அதன் தலை சிலுப்பிப் போகிறது
சிகரெட் புகையைச் சுழற்றி தூர வீசி

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5953

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக