வெள்ளி, மார்ச் 28, 2014

இரண்டாயிரத்து நூற்றிப் பன்னிரெண்டாவது குரு


ஆழமற்று அசையும் இலை மீது
பதியும் விரல்கள்
புடைத்த அதன் நரம்புகளை நீவும்போது
வெடிக்கிறது நாளம்

மத்தி புருவத்தில் நுழையும் வெயில்
இழைக்கிறது நாணை

சுண்டியிழுக்கும் கட்டைவிரல்
துண்டாகி விழும் நிலத்தில்
முளைக்கிறது யுத்தம்

வேட்டையிலிருந்து வேட்டையின் மீது
தாவும் கால்கள் ஓயாத
கானகத்தின் இருவழிப் பாதை
நீள்கிறது ஒரு மௌனக் கிளைக்கு

கால் தடம் அழைத்துப் போகும்
குருதி சலசலக்கும் நதிக்கரை வரை

உருளும் கனவுகளின் முனை மழுங்கிய
கூழாங்கற்கள் பெயரற்று நிறமழிந்து இசைக்கிறது
உயிர் நதியின் மீட்சியை யாசித்து

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6157

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக