திங்கள், மார்ச் 31, 2014

நிழல் சிறகின் தனிமை..

*
நடமாட்டமற்ற
ஒரு சாலை
வெயில் சுமந்துக் காத்திருக்கிறது
யாரேனும் வந்து போவதற்கு

மரங்களே இல்லாத
விளக்குக் கம்பங்கள் மட்டுமே
நிற்கும்
அத்தனிமையை

சிறகு விரித்துத் துரத்தும்
தன் நிழலைக் கண்ணுற்றபடி வட்டமிடுகிறது
அதே காத்திருத்தலோடு
மேலே ஒரு வல்லூறு

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூலை - 6 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20389-2012-07-07-04-04-53

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக