வெள்ளி, மார்ச் 28, 2014

பொய்த்துவிட்ட சத்தியங்களின் மேகம்..

*
கருணையொன்றை யாசிக்கும் கண்கள்
கைவிடப்பட்ட தருணங்களை ஊடுருவி கூர்கிறது
பலி பீடத்தை

வெடித்த நிலத்தின் ரேகைக் கீறலில் இல்லை
ஈரம்
பொய்த்துவிட்ட சத்தியங்களின் மேகம் ஏதும்
சொல்லாமல் கடந்து போகிறது அந்தகாரத்தை

கோடைப் பாலையின் நீண்ட மணல்வெளியில்
இருக்கக் கூடும் நீர்ப்பரப்பென உன்
மற்றுமொரு காலத்திற்கான வெற்றிடம்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ அக்டோபர் - 8 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5996

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக