திங்கள், மார்ச் 31, 2014

துடுப்பில்லா படகு..

*
அயர்ச்சியில்
கை நழுவி விழுந்த புத்தகத்தின்
42 வது பக்கத்தில்
துடுப்பில்லா படகொன்று
தூரதேச நதியின் திசையறியாமல்
நகர்ந்து கொண்டிருக்கிறது

நானிந்த படகிலிருந்தபோது தான்
அந்தப் புத்தகமும்
நழுவி விழுந்திருக்க வேண்டும்

என் புத்தகங்களுக்கு
நீச்சல் தெரியாது

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூலை - 30 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6243

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக