திங்கள், மார்ச் 31, 2014

கடந்துவிட்டதாகச் சொல்லும் இரவு..



*
சொற் பைத்தியங்கள் திணறுகின்றன
முன் வைக்கப்பட்ட வாதங்கள்
காகித அடுக்கில் நசுங்கிக் கிடக்கிறது

கடந்து விட்டதாகச் சொல்லும் காலத்தின் இரவுகளையோ
அது தன்னகத்தே எழுதி வைத்திருக்கும் ரகசியங்களையோ
குறிப்புணர்த்தும்படி பரிந்துரைக்காத
பிரதிவாதிகளின் சாட்சியங்கள்
ரத்தம் உறைந்த மணல் துகளென நிறம் இழக்க மறுத்து
உறுத்துகிறது சூழலை

ஓர் உத்தரவுக்குப்  பணிய பழக்கப்பட்டிருக்கும் தலைகள்
தையலிட்டு இறுகிக் கிடக்கும் உதடுகள்
அர்த்தங்களை நெம்புவதற்கு திராணியற்ற பேனாவைப்
பற்றியிருக்கும் விரல்கள்

யாவற்றுக்கும் ஒத்திசைந்து திணறும்
சொற்பைத்தியங்களின் சபை
ஒரு கட்டளையின் அச்சில் சுழல்கிறது

காலத்தை உருட்டியபடி

*****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 12 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20085-2012-06-13-08-02-17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக