வெள்ளி, மார்ச் 28, 2014

காற்றில் சிக்கும் கூந்தல் இழை..

*
வளைந்துத் திரும்பி இட்ட முத்தத்தில்
நழுவுகிறது
பார்வையோடு புன்னகையொன்று

அலைபறத்தும் காற்றில் சிக்குகிறது கூந்தல்
இழைக் கோடுகளென
ஒதுக்கும் விரல்கள் நகம் நிமிண்ட
பள்ளம் பறிக்கிறது அழுந்த உதட்டில்

தீஞ்சுவைக் குமிழ் உடைந்து
மொக்கிளகி விரைகிறது நாவெங்கும் நதியாகி

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ அக்டோபர்  - 1 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5965

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக