*
நடைவழியில் நகரும் நிழல்களின் நுனி
நடைவழியில் நகரும் நிழல்களின் நுனி
இழுத்துக் கொண்டு போகிறது
வெயிலின் மஞ்சள் கரையை
படியை நோக்கி
பூச்சாடியிலிருந்து உதிர்ந்த
காகிதப் பூவின் இதழ்
வெளுத்துவிட்ட நிறத்தின்
கிழிசலோடு
சொற்ப காற்றுக்கு படபடக்கிறது
சுவரின் ஓரமாக ஒண்டியபடி..
அமைதி பூசிய மேற்கூரையின்
மௌன மூலையில்
நிதானமாக வலை பின்னிக் கொண்டிருக்கிறது
காலச் சிலந்தி..
*****
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூன் - 17 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15205&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக