*
நகரின் மௌனம்
தன் அடர்ந்த செதில்கள் ஊடே
இடையறாது சுவாசிக்கிறது
இரவுகளை
அது
துணுக்கு விளக்கொளிகளில்
கரைகிறது
அழுக்கின் கசடென
எளிதில் கடந்துவிட முடியாத
தருணங்களை
உற்பத்தி செய்கிற ரகசிய இருப்பிடமாய்
மாற்றிக் கொள்கிறது
தன் மீது ஊர்ந்து
கூடடையும்
நகர மனிதர்களின்
மௌனங்களை
*****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மே - 2 - 2011 )
நகரின் மௌனம்
தன் அடர்ந்த செதில்கள் ஊடே
இடையறாது சுவாசிக்கிறது
இரவுகளை
அது
துணுக்கு விளக்கொளிகளில்
கரைகிறது
அழுக்கின் கசடென
எளிதில் கடந்துவிட முடியாத
தருணங்களை
உற்பத்தி செய்கிற ரகசிய இருப்பிடமாய்
மாற்றிக் கொள்கிறது
தன் மீது ஊர்ந்து
கூடடையும்
நகர மனிதர்களின்
மௌனங்களை
*****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மே - 2 - 2011 )