வெள்ளி, நவம்பர் 06, 2009

திசை முட்கள்..

*

கனவின் நான்கு திசைகளிலும்
இரண்டிரண்டு வாசல்கள்..

ஒவ்வொரு வாசலிலும்
ஒரு நண்பன்..

ஒவ்வொரு நண்பனும்
அழைத்துப்போக காத்திருக்கிறான்
அவனவன் திசைநோக்கி..

இமை கூசி
கண் திறந்த பார்வையில்..
அகப்பட்ட கடிகாரத்தில்

முட்களிரண்டும்
உதிர்ந்து கிடந்தன..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக