வியாழன், நவம்பர் 19, 2009

பனிப் போர்த்திய ஜன்னல் கண்ணாடிகள்..

*

பொய் சொல்லுவதற்கான
ஒப்புதலை..
ரகசியமாய்
உள்ளங்கையில்.. கிள்ளி
உறுதி செய்து கொண்டாள்..

வாசல் கடந்து..
வீட்டுக்குள் நுழைந்த நொடியில்..
அவள் அம்மாவின் கண்களை
சந்தித்தக் கணத்தில்..
ரகசியக் கண்ணாடியை
உடைத்தன..
என் உதடுகள்..

' நான் உங்கள் மகளை
காதலிக்கிறேன்..' - என்றேன்..

' சோ ' வெனக் கைத்தட்டி
வரவேற்றது..
எதிர்பாராத ஒரு ஆலங்கட்டி மழை..

பூக்களும்..
ஒருமித்த மனதோடு..
தலையசைத்துக் கொண்டன..

ஏனோ..
கனத்த மௌனத்தோடு..
வெகுநேரம்..
என்னையும்.. அவளையும்..
அவள் அம்மாவையும்..
பனிப் போர்த்தி வேடிக்கைப் பார்த்துக்கொண்டே
இருந்தன..
ஜன்னல்.. கண்ணாடிகள்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக