வியாழன், நவம்பர் 19, 2009

வெங்காயச் சருகுகள் மண்டும் வேறொரு மரத்தடி..

*

சிவப்பேறிக் குமிழ் கொப்புளிக்கும்..
இரவின் கீழ் முனையில்..

நரை கீறி..
புரையோடிய..நிலவின்
இடுப்பையொடிக்க..

மூங்கில் சீவுகிறோம்..
நானும்..
தாடிக் கிழவனும்..

' வெட்டி வேலை ' - என்பதாக
திண்ணையில் துண்டுத் தட்டி
எழுந்து போகிறார்..
வேறொரு மரத்தடித் தேடி..

' வெங்காயம்..'

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக