வியாழன், நவம்பர் 19, 2009

இரவின் நிழல் மழை..

*

சிம்னிக் குடுவைக்குள்..
காற்றின் தூரிகை..
எழுதும்..
சுடர் நிறத்தில்..

உருகி வழிகிறது..
ஒரு
கரு நிழல்..

அது..
சுவர் முழுதும்
படர்ந்து படர்ந்து..
மெல்ல
வெளியேறுகிறது..
என்னை இழுத்துக்கொண்டு..

மழையில் நனையும்படி..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக