வியாழன், நவம்பர் 19, 2009

குமிழ்களில் அடைபடும் மினுமினுப்பு..

*
என் அறையிலிருக்கும்
உயிரற்றவைகள்..
கோபத்தின்
இலக்காகி உயிர் விடுகின்றன..
முரட்டுக் கரங்களில்..

விளைவுகளின்
உணர்வுக் கதுப்பில்..
குமிழ் விடுவதில்..
அடைபடுகிறது
நியாயங்களின் மினுமினுப்பு..

உடைந்த சிலப் பொருட்களில்
அடையாளம் விட்டு நகர்கிறேன்..
என் கோபத்தின் முனைகளை..

இப்போதும்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக