வியாழன், நவம்பர் 19, 2009

முக்காடிட்டு உட்காரும் ஒரு நீண்டப் பெருமூச்சு..

*

ஒரு சமவெளிப் பாலையில்..
பாதம் புதைய..
வெகு நேரம் நடந்ததின் முடிவில்..
மேலும் மேலும்..
மணலும் காற்றும்..
எழுதி வைத்திருக்கும் வரிகள்..

நா வறண்டு காய்ந்த வெப்பத்தில்..
எழுத்துக்கள்..
மொழியைத் தொலைத்தத் தவிப்போடு..
தொண்டைக்குள் இறங்க மறுக்கின்றன..

மூச்சுக் காற்றின் உஷ்ணத்துள்..
முக்காடிட்டு..
ஓசையின்றி உட்காருகிறது
ஒரு நீண்டப் பெருமூச்சு..

என்ன செய்ய..?

புருவங்களுக்கு மேல்..
உள்ளங்கை குடைப் பிடித்து..
தொலைவில் நெளியும் கானல் நீரில்..
யாரைத் தேடுகிறது..
இந்தப் பார்வை..?

உரையாடலுக்கு வழியற்று..
மௌனமாய் நிற்கிறோம்..
நானும்.. என் மொழியும்..

யாராவது..
என் தலைக்கு மேல் விரிந்த
வானத்தில்..
வட்டமிடும்..
ஒற்றைப் பருந்தின்..
உதிரும் இறகொன்றைப்
பிடித்தபடி..
என்னருகில் இறங்குங்களேன்..

நீண்ட ஒரு உரையாடலுக்காக...
மௌனமாகக் காத்து.. நிற்கிறோம்..
நானும்..
என் மொழியும்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக