வெள்ளி, நவம்பர் 06, 2009

குடில் குருவியின் மணித்துளி..

*

அழகிய
குடில் வடிவக் கடிகாரத்துக்குள்ளிருந்து..
ஒவ்வொரு மணி நேரத்துக்கும்
கதவுப் பிளந்து
வெளிப்பட்டுக் கூவும் குருவி..

என்ன நினைத்ததோ..

இன்று அதிகாலை..
குடில் விட்டு வெளியேறி..

ஜன்னல் திட்டில் பறந்தமர்ந்து..
இளவெயிலில்
சிறகு கோதியது..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக