வியாழன், நவம்பர் 19, 2009

நெளியும் மீனும்.. பூனைக்குட்டியும்..

*

குடை விரிப்புக்கான
பொத்தானை அழுத்திய வேகத்தில்..
வானம் விரிந்தது..

மழை நீரே உறைந்து..
சில்லிட்ட குடைக் கம்பியானது..

கணுக்கால் நீரளவில்..
தெருவே..
மீனாகி நெளிந்தது..

நான்கு பிரிவு சாலை முக்கில்..
மல்லாந்து
வாய் பிளந்துக் கிடக்கும்..
குப்பைத் தொட்டிக்குள்..

பதுங்கியபடி கவிதை வாசிக்கிறது
பூனைக்குட்டி..

ஓயாத மழையோடு..
போட்டியிட்டு நீள்கிறது..
கவிதை மழை..

' மியாவ்..மியாவ்..! '

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக