வெள்ளி, நவம்பர் 06, 2009

பின்னலிடத் தொடங்கும் முனை..

*

எரியும் சடலங்களின்
நின ஒழுகலை
தீயின் கண்ணீரென
காணத் தவறிய வெட்டியான்..

தடித்த மூங்கில் கழிக் கொண்டு
மேலும் தூண்டி..
மரணத்தைக் குளிர்காய்கிறான்..

மிச்சமிருக்கும் வெளிச்சம்
அந்தி நோக்கிக் கசியும் கணத்தில்..

'இரவு' -

மயானத்தின் அடர்ந்த பந்தல் நுனியை..
பின்னலிடத் தொடங்குகிறது
கனத்த அஞ்சலியோடு..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக