வெள்ளி, நவம்பர் 06, 2009

மெட்ரோ கவிதைகள் - 34

*
மழையில்
உடல் முழுக்க
நனைந்த பிறகும்..

பறக்கத் தோன்றாமல்
மயிர் சிலுப்பி..

மொட்டைமாடியின்
ஒற்றைக் கொம்பில்
பிடிவாதமாக
அமர்ந்திருக்கிறது..

எப்போதும் போல்
இன்றும்
ஒரு காகம்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக