வெள்ளி, நவம்பர் 06, 2009

நகமென வளருமேயென...

*

அழும்படி
உன்னைப் பணிக்கும்
கடவுளை
உனக்காக நேர்ந்துக் கொள்ளும்படி
நீ பணிக்கலாம்...

இரவுகளை
கைக்குட்டையாக்கி
அடிக்கடி ஈரப்படுத்தாமல்
வெளிச்சம் மங்கும் பகல்களை
ஒரு தொட்டி நீரில்
ஊற வைக்க முயற்சிக்கலாம்..

உன்
பதற்றங்களை
பல்லிடுக்கில் செருகி..
உடனே கடித்துத் துப்பிவிடுவதால்..
மீண்டும்
நகமென வளருமேயென
யோசனைத் தேவையில்லை..

வாழ்வதற்கான பக்குவத்தை..
திருமணப் பத்திரிகையில்
யாரும் அச்சடிப்பதில்லை..

அவ்வப்போது
உலரும் உதடுகளை
புன்னகையால் நனைத்துக்கொள்..

வரவேற்பறையில்..
விருந்தினர்கள்
காத்திருக்கக் கூடும்..!

*****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) நவம்பர் - 2009

www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2210

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக