*
வார்த்தைகளின்
வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன்
என் மனவெளியை
சூறையாடிக் கொள்
நேற்றிரவு உரையாடலின்
குளம்
இன்னும்
தளும்பிக் கொண்டிருக்கிறது
அதில்
உன் மௌனக் கொக்கு
ஒற்றைக் காலில்
நி
ற்
கி
ற
து..
நீ
சுருள் பிரிக்கும்
உன் கைத் தூண்டில் முனையில்
ஒரு எழுத்து நெளிகிறதே
மீன் பிடிக்கவா..?
தூ..!
கொக்கை விரட்டு
கொக்கை விரட்டு..
*******
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மே - 30 - 2011 )
வார்த்தைகளின்
வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன்
என் மனவெளியை
சூறையாடிக் கொள்
நேற்றிரவு உரையாடலின்
குளம்
இன்னும்
தளும்பிக் கொண்டிருக்கிறது
அதில்
உன் மௌனக் கொக்கு
ஒற்றைக் காலில்
நி
ற்
கி
ற
து..
நீ
சுருள் பிரிக்கும்
உன் கைத் தூண்டில் முனையில்
ஒரு எழுத்து நெளிகிறதே
மீன் பிடிக்கவா..?
தூ..!
கொக்கை விரட்டு
கொக்கை விரட்டு..
*******
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மே - 30 - 2011 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக