புதன், மே 18, 2011

இறுதிக் குமிழ்..

*
நீங்கள் சொல்வதிலிருந்து
மீள்வதற்கான
ரசவாதம்
ஒரு ஊற்றாகப் பிரவாகித்து
நதியாக ஓடுவதில் மூச்சுத் திணறுகிறது.

என்னை
அள்ளிப் பருகும் கரையில் நின்றபடி 
கால் நனைத்து நீங்கள் உணரும் சில்லிடல்
என் மனப் பிறழ்வின்
வெப்பப் பெருகல்.

சொன்னவைகளின் குறிப்புகள்
சிவப்பு மையால்
அடிக் கோடிட்டு கிழிகின்றன

ஒரு
மகாச் சுழியென
முற்றுப்புள்ளிக்குள் இழுபட்டு
எஞ்சி மேலெழும்
இறுதிக் குமிழ் உடைவதில்
பரவுகிறேன்

உங்கள் வெளியெங்கும்
நகரெங்கும்
வாழ்வெங்கும்..

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே - 16 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4306

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக