வெள்ளி, ஜூன் 24, 2011

உறைந்திடும் துளி ரத்தம்..

*
உன்
துயரத்தின் சாயலை
நகலெடுத்துக் கொள்ளும்படி
உத்தரவிடுகிறாய்

பிடி நழுவும் குறுவாளின்
கூர் முனையில்
உறைந்திடும் துளி ரத்தம்..

ஊடுருவி மீண்ட
துரோகக் கணத்தின் சாட்சியென
துருப்பிடித்துக் காத்திருக்கிறது

உன் 
வரவுக்காக

*******

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 5 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக