வெள்ளி, ஜூன் 24, 2011

புதிர் நிறைந்த முற்றுப் புள்ளி..

எரிந்து மிச்சமாகும் சாம்பல் துகள்கள்
அறையெங்கும் படிகிறது
 
திறந்து கிடக்கும் புத்தகத்தின்
வாசிக்க மறந்த பக்கத்தில்
ஒத்துவராத வாக்கியங்களுக்கு நடுவே
சலனமற்று விழுந்து கிடக்கிறது 
புதிர் நிறைந்த முற்றுப் புள்ளியென
ஒரு சாம்பல் துளி
 
அர்த்தங்களுக்கான விளக்கங்கள்
இவ்விரவு நெடுக நிழலென
அசைந்துக் கொண்டே இருக்கிறது
ஜன்னலுக்குரிய மெல்லிய திரைச் சீலையில்
 
மனதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும்  
துரோகங்கள்  
மேலும்  எரிந்து சாம்பலாகிறது
எதையும் மிச்சம் வைக்காமல் 
 
*****  

நன்றி : ( உயிரோசை / உயிர்ம்மை.காம் ) [ ஜூன் - 27 - 2011 ] 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4501

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக